Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

மகாத்மா காந்தியின் தனி உதவியாளர் கல்யாணம் மறைவு : சென்னையில் இன்று பகல் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

மகாத்மா காந்தியின் தனி உதவியாளர் வி.கல்யாணம் (99) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

மகாத்மா காந்தியிடம் கடைசி தனி உதவியாளராக இருந்தவர் வி.கல்யாணம். இவர், சிம்லாவில் 1922 ஆக.15-ம் தேதி பிறந்தார். டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் பி.காம் பட்டம் பெற்றார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியரும், காந்தியின் மகனுமான தேவதாஸ் காந்தி மூலமாக காந்திஜியிடம் அறிமுகம் ஆனார். அலுவலக வேலையைவிட சிறு வயதில் இருந்தே உடல் உழைப்பை அதிகம் விரும்பியதால் காந்தியின் ஆசிரமத்தில் சேர்ந்தார். காந்திஜியின் தனி உதவியாளராக எப்போதும் அவருடனே இருந்தார். அனைத்து இடங்களுக்கும் காந்தியினுடன் பயணித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x