Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

தினசரி கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது : தமிழகத்தில் முதியவர்கள் உட்பட 147 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியது. முதியவர்கள் உட்பட 147 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்11,951, பெண்கள் 7,637 என மொத்தம் 19,588 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 30 பேருக்கு தொற்றுஉறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5,829, செங்கல்பட்டில் 1,445, கோவையில் 1,257,திருவள்ளூரில் 779, மதுரையில் 711 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்து 86,344 ஆக அதிகரித்துள்ளது.

10.55 லட்சம் பேர் குணம்

இதுவரை சென்னையில் 3 லட்சத்து 3,531 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 54,746 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 5,693 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 17,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னையில் 31,475 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 17,405 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 147 பேர்உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 47 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14,193 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,791 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 3 லட்சத்து 39,797,செங்கல்பட்டில் 81,477, கோவையில் 79,669, திருவள்ளூரில் 60,371என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 265 அரசு, தனியார்ஆய்வகங்களில் இதுவரை 2.28கோடி பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 51,452 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x