

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குறைபாட்டால் 7 பேர் மரணமடைந்தது குறித்து, விரிவான அறிக்கையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளகரோனா வார்டில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், நுரையீரல் தொற்றுப் பிரச்சினையுடன் இருப்பவர்கள் மற்றொரு வார்டில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஆக்சிஜன் விநியோக மையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் திணறினர். அதற்குள் கரோனாவில் குணமடைந்து நுரையீரல் தொற்றுப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மாற்று ஏற்பாடாக 5 அடி உயரம் கொண்ட சிலிண்டர்கள் மூலம் நோயாளிகள் சிலருக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.
மருத்துவக் கல்வி இயக்குநர்
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபுவிடம் நேற்று தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 10 ஆயிரம்லிட்டர், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோகம் செய்யும் வசதி உள்ளது.மேலும், 150 எண்ணிக்கையில் 5 அடி உயர சிறிய சிலிண்டர்கள் உள்ளன. இதன் மொத்த கொள்ளளவு 1,500 லிட்டர். மருத்துவமனையில் தற்போதுள்ள நோயாளிகளுக்கு தினசரி 1,500 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை
7 பேர் உயிரிழப்புக்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.