மனைவிக்கு கொலை மிரட்டல் : கணவருக்கு சிறை :

மனைவிக்கு கொலை மிரட்டல்  : கணவருக்கு சிறை :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் மோகனூரைசேர்ந்த கூலித்தொழிலாளி அசோகனுக்கும்(50), அவரது மனைவிஅன்னப்பூரணிக்கும்(50) 2019-ல்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் வீட்டின் கதவையும் மண்ணெண்ணெய் ஊற்றி அசோகன் எரித்துள்ளார்.

மோகனூர் போலீஸார் அசோகனை கைது செய்தனர். நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், அசோகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in