Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

அமைச்சர் வேலுமணி மீது கோவை போலீஸார் வழக்கு :

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்தொகுதி அதிமுக வேட்பாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, வாக்குப்பதிவு தினமான நேற்று முன்தினம், வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

குனியமுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றபோது, அவர் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தேர்தல்பிரிவு மண்டல அலுவலர் ராஜா முகமது, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்தபுகாரில், ‘‘அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் குனியமுத்தூர் அரசுப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு கட்சிக்கொடி கட்டப்பட்ட காரிலும், வாக்குச்சாவடிக்குள் கட்சி துண்டை கழுத்தில் அணிந்து கொண்டும் வந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தேர்தல் நடத்தைவிதிகளை மீறியதாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x