Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM
தேனி மாவட்டம் போடி தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் துணைமுதல்வர் மகன் ப.ரவீந்திரநாத்எம்.பி.யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
போடி தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் நடந்த வாக்குப்பதிவை ரவீந்திரநாத் எம்.பி. நேற்று பார்வையிட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டுஇருந்தார். அப்போது அவரதுகாருக்கு அருகே நின்றிருந்த அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட தகராறில் அந்த ஊரைச் சேர்ந்த சிலர், எம்.பி.யின் கார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். இதில் கார் கண்ணாடிகள் நொறுங்கின. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார்,அவர்களை விரட்டியடித்தனர்.
இதையடுத்து கார் கண்ணாடியை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போடி தாலுகா காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் கொடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT