Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM
தமிழகம் முழுவதும் 867 இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘சில இடங்களில் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. அவ்வாறு 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 134 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 559 விவிபாட் இயந்திரங்கள் என 867 மின்னணு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டன. அவை உடனடியாக சரி செய்யப்பட்டன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT