செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சை பேச்சு - அண்ணாமலை மீது வழக்கு :

செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சை பேச்சு -  அண்ணாமலை மீது வழக்கு :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிதொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தனது தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டிகோட்டை அருகே உள்ள பூமதேவம் பகுதியில் மார்ச் 31-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளரும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியை மிரட்டும் வகையிலான சர்ச்சைக்குரிய பேச்சு, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோ தொடர்பாக அரவக்குறிச்சி போலீஸில், செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதையடுத்து, அண்ணாமலை மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல்), 506 (1) (கொலை மிரட்டல்) மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் நேற்று அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in