Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தருமபுரியில் நடந்த கூட்டத்தில் 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் முடிவு எடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட சுமைதாங்கி மேடு பகுதியில் நேற்று எட்டுவழிச் சாலை எதிர்ப்புஇயக்க விவசாயிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், பேரவைபொதுத் தேர்தலில் அரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஆதரவு அளிப்பது, திமுக-வின் தேர்தல் அறிக்கையில் சேலம்-சென்னை இடையிலான 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப் படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் முதல் சேலம் வரை 8 வழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள சட்டப்பேரவை தொகுதிகள் அனைத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT