சுயேச்சையாக களம் இறங்கும் பாஜக மாவட்ட செயலாளர் :

சுயேச்சையாக களம் இறங்கும் பாஜக மாவட்ட செயலாளர் :
Updated on
1 min read

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜக மாவட்ட செயலாளர் குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட பாஜக செயலாளர் ஓம் சரவணா (38). குமாரபாளையத்தில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் பாஜக சார்பில் குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்ப மனு அளித்திருந்தார். எனினும், கூட்டணியில் குமாரபாளையம் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும், அமைச்சருமான தங்கமணி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த ஓம் சரவணா சுயேச்சையாக களம்இறங்க முடிவு செய்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,இத்தொகுதிக்கு குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒருவரேபேரவை உறுப்பினராக வரவேண்டும். பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in