சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு - நெல்லிக்காய் மூட்டைபோல் அதிமுக சிதறிவிடும் : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு -  நெல்லிக்காய் மூட்டைபோல் அதிமுக சிதறிவிடும் :  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நெல்லிக்காய் மூட்டைபோல் அதிமுக சிதறிவிடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடஇன்று பிற்பகல் 2 மணியளவில் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளேன். மாலையில் கோவில்பட்டியில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளேன். அமமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எங்களது தேர்தல் அறிக்கையில், மக்களை ஏமாற்றும் திட்டங்களை அறிவிக்கவில்லை. நாங்கள், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம். அதன்மூலம் ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு பெற, வளர்ச்சி அடைய நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம். அமமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

அதிகார துஷ்பிரயோகம்

அனைத்து துறைகளிலும் ஊழல்

ஆட்சி இருக்கும் வரைக்கும்தான் அதிமுக கட்சி இருக்கும். அதன்பிறகு நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறிவிடும். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனை வரும் எங்களுடன் இணைவார்கள். அதிமுகவை மீட்டெடுப்போம். தேர்தலுக்கு பிறகுஅரசியலுக்கு மீண்டும் வருவது குறித்து சசிகலாதான் முடிவெடுக்க வேண்டும்.

மாற்று சக்தியாக அமமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in