Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுஅமைச்சர் தகவல்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குண்டேரிப்பள்ளத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கேற்ப தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.

மேலும், ‘ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில், அந்த வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுவார்களா எனக் கேட்டபோது, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x