Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

தமிழகத்தில் புதிதாக 503 பேருக்கு கரோனா தொற்று முதியவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 503 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 300, பெண்கள் 203 என மொத்தம் 503 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 151 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 36,818 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 25,156 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 19,850 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 176 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 544 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 1,582 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 4,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதியவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,339 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,096 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 30,834, கோவையில் 54,225, செங்கல்பட்டில் 51,409, திருவள்ளூரில் 43,486 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 254 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 58 லட்சத்து 60,674 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 52,457 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x