Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

பிப்.6-ல் சேலத்தில் பாஜக இளைஞரணி மாநில மாநாடு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்பு

``சேலத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்” என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறும்போது, ``தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த வரும் 31-ம் தேதிகட்சியின் தேசியத் தலைவர் ஜேபி.நட்டா மதுரை வருகிறார். சேலத்தில் பிப்ரவரி 6-ம் தேதி பாஜக இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது.

14-ல் மகளிரணி மாநாடு

இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 14-ம் தேதி ராமேசுவரத்தில் மகளிரணி மாநாடு நடைபெறுகிறது” என்றார்.

இக்கூட்டத்தில் பங்கேற்றபாஜக தேசிய பொதுச்செய லாளர் சி.டி.ரவி கூறியதாவது:

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.

பாஜக வலுவாக உள்ளது

தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது. வெற்றி நிலவரங்களைப் பொறுத்து ஏ, பி, சி என தொகுதிகளை மூன்றாகப் பிரித்துள்ளோம். இதில் `ஏ’பிரிவில் உள்ள தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவுக்குபலமாக உள்ளது. `பி’ பிரிவில் இன்னும் கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. `சி’ பிரிவில் பலவீனமாக உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x