Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

இதுவரை 8.27 லட்சம் பேருக்கு தொற்று தமிழகத்தில் புதிதாக 671 பேருக்கு கரோனா முதியவர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 671 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 416, பெண்கள் 255 என மொத்தம் 671 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 194 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 27,614 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 22,039 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 8,571 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 219 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 827 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் என நேற்று 8 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,236 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,053 பேர் இறந்துள்ளனர்.

1.49 கோடி பரிசோதனைகள்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 28,169,கோவையில் 53,259, செங்கல்பட்டில் 50,651, திருவள்ளூரில் 43,096 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 249 அரசு மற்றும் தனியார்ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 49 லட்சத்து 45,576பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 60,563 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கரோனா தொற்று

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 24 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது. அவர்களின் சளி மாதிரிகள் புனே மற்றும் பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில், 4 பேருக்கு உருமாறிய புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து வந்த மேலும் 2 பேருக்குகரோனா தொற்று உறுதியானதால், அவர்களின் சளி மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x