Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
தமிழகத்தில் புதிதாக 671 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 416, பெண்கள் 255 என மொத்தம் 671 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 194 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 27,614 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 2 லட்சத்து 22,039 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 8,571 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 219 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 827 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் என நேற்று 8 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,236 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,053 பேர் இறந்துள்ளனர்.
1.49 கோடி பரிசோதனைகள்
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 28,169,கோவையில் 53,259, செங்கல்பட்டில் 50,651, திருவள்ளூரில் 43,096 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 249 அரசு மற்றும் தனியார்ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 49 லட்சத்து 45,576பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 60,563 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் கரோனா தொற்று
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து வந்த மேலும் 2 பேருக்குகரோனா தொற்று உறுதியானதால், அவர்களின் சளி மாதிரிகளும் பரிசோதனைக்காக புனேஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT