Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM
கோவை அருகே பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் கொடுமை செய்ததாக சில இளைஞர்கள் மீது 2018-ல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், மாக்கினாம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜோதிநகர் ரிஸ்வான் (எ) சபரிராஜன், பக்கோதிபாளையம் வசந்தகுமார், சூளேஸ்வரன்பட்டி சதீஷ், ஆச்சிப்பட்டி மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 2019 ஏப்ரல் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இவ்வழக்கில் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த அருளானந்தம், பாபு, ஆச்சிப்பட்டி ஹேரேன்பால் ஆகிய 3 பேரை கடந்த 5-ம் தேதி சிபிஐ கைது செய்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.
இந்நிலையில், ஹேரேன்பாலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி சிபிஐ தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி, 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT