தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
Updated on
1 min read

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்கள் வீசித் தாக்கினர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிருபை என்பவருக்குச் சொந்தமான ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் கைது செய்து காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (ஜன.11) முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in