Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது

நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையம் நாகத்தோப்பைச் சேர்ந்த கணவரை இழந்த 40 வயதுடைய சித்தாள் வேலை பார்க்கும் பெண் ஒருவர், கடந்த 6-ம் தேதி நாகை வண்டிப்பேட்டையில் உள்ள தன் சகோதரியின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, நாகை வண்டிப்பேட்டையைச் சேர்ந்த அப்பாஸ் என்கிற அருண்ராஜ்(24), நாகை அக்கரைக்குளத்தைச் சேர்ந்த ஆனந்த்(24) ஆகிய 2 பேரும், அந்தப் பெண்ணை வழிமறித்து வாயைப் பொத்தி, அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர். மது போதையில் இருந்த அந்த 2 இளைஞர்களும் அந்தப் பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதுடன், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x