பிரிட்டனில் இருந்து நீலகிரிக்கு திரும்பிய 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி

பிரிட்டனில் இருந்து நீலகிரிக்கு திரும்பிய 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

பிரிட்டனில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு திரும்பிய 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரிட்டனில் இருந்து நீலகிரிக்கு திரும்பிய 14 பேரை பரிசோதனை செய்த தில், 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

இவர்களின் முதல்நிலை தொடர்பாளர்கள் 35 நபர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டதில், ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த 109 பேர், இவர்களுடன் தொடர்புடைய 82 பேருக்கு பரிசோதனை செய்ததில் அனைவருக்கும் கரோனாதொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. இவ்வாறு ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in