இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கைது
Updated on
1 min read

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து நேற்று 273 விசைப்படகுகளில் சுமார் ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை கோட்டைப்பட்டினத்தில்இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் ஆர்.கான்ஸ்டன்ட்(42), கே.ரமேஷ்( 38), பி.பாண்டு(50), என்.மோகன்(44) ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 4 பேரையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். மேலும், அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான மீனவர்களையும், படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மீனவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in