ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் கருத்து சொல்கிறேன்: பிரேமலதா

ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் கருத்து சொல்கிறேன்: பிரேமலதா
Updated on
1 min read

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை எந்த புயலாக இருந்தாலும் டிசம்பர் மாதம் வந்து பேரழிவை கொடுத்து செல்கிறது. வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் விவசாயிகளும் மத்திய அரசும் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இதுவரை ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடந்து பிடிவாதமாக இருப்பதால், இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன் என்றார்.

அப்போது செய்தியாளர்கள், ‘ரஜினிகாந்த் கட்சித் தொடங்கி, அதிமுகவுடன் கூட்டணி ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறதே!’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா, “ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்; கட்சியின் பெயரை அவர் கூறட்டும்; தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்திக்கட்டும்; பிறகு எங்கள் கருத்துகளை கூறுகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in