Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் கரைதிரும்பாத 215 குமரி விசைப்படகுகள்

நேற்றைக்குள் விசைப்படகுகள் கரை திரும்ப வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், கேரளா மற்றும் லட்சத்தீவு, கர்நாடக ஆழ்கடல் பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன.

விசைப்படகுகள் சிலவற்றில் சேட்டிலைட் போன்கள் இருந்தும், புயல் எச்சரிக்கை தகவல் இதுவரை மீனவர்களுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் விசைப்படகுகள், அதில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அந்தந்த பகுதிகளில் கரை திரும்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x