கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க குத்தகைக்கு கோயில் நிலம் நில விற்பனையை ரத்து செய்தது இந்து சமய அறநிலையத்துறை

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க குத்தகைக்கு கோயில் நிலம்    நில விற்பனையை ரத்து செய்தது இந்து சமய அறநிலையத்துறை
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வீர சோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 39.82 ஏக்கர் நிலத்தை ரூ.1 கோடியே 98 லட்சத்து 87 ஆயிரத்து 38-க்கு வருவாய்த் துறைக்கு விற்பனை செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஆணை பிறப்பித்தது.

மாத வாடகை ரூ.1.30 லட்சம்

அதன்படி, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 16.11 ஹெக்டேர் புன்செய் நிலத்தில், 14.09 ஹெக்டேர் (39.82 ஏக்கர்) நிலத்தை, மாத வாடகை ரூ.1.30 லட்சம் என்ற அடிப்படையில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைக்க, வருவாய்த் துறைக்கு நீண்ட கால குத்தகைக்கு விடப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

நிபந்தனைகள்

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை மறு நிர்ணயம் செய்யப்படும். புதிதாக கட்டிடம் கட்டும்போது, செயல் அலுவலரின் அனுமதி பெற வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் தவிர இதர வணிக நோக்கம் எதற்கும் கோயில் நிலத்தை பயன்படுத்தக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in