Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தும் தேதியை நீட்டிக்க கோரிக்கை

திருவாரூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

நவ.24-க்கு பின்னர் பயிர்க் காப்பீடு பிரீமியம் பெறப்பட மாட்டாது என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது. எனவே, நிபந்தனையின்றி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் இணையதள சேவை மையங்கள் மூலமாக டிச.15 வரை காப்பீடு தொகையை பெற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x