Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

பெரம்பலூர் அருகே விதைப்புக்காகவைத்திருந்த 300 கிலோ வெங்காயம் திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே விதைப்புக்காக வயலில் வைத்திருந்த 300 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் விதை வெங்காயம் கிலோ ரூ.90 வரை விற்பனையாகிறது.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன்(65) தனது வயலில் விதைப்பதற்காக 5 மூட்டைகளில் 300 கிலோ விதை வெங்காயத்தை, வயலில் உள்ள கொட்டகையில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 300 கிலோ வெங்காயமும் திருடு போய்விட்டது. இதன் மதிப்பு ரூ.27 ஆயிரம்.

நேற்று காலை வயலுக்குச் சென்ற கணேசன், விதை வெங்காயம் திருடு போனதை அறிந்து பாடாலூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார், வெங்காயத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

இவரது வயலில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 500 கிலோ விதை வெங்காயம் திருடு போனது என்பதும், அப்போது சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.150 என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x