Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
சட்டப்பேரவை தேர்தல் பணிகள், கட்சிப்பணிகளையும் விரிவுபடுத்த மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை புறநகர்மேற்கு, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டங்கள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போது அதில், கடையநல்லூர், சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்டம் அமைச்சர் கடம்பூர் சி.ராஜூவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT