Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

தமாகாவுக்கு கூடுதல் இடம் தர வாசன் வலியுறுத்தல்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு கூடுதல் இடங்களை கேட்டுபெறுவோம் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு, தமாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் தமாகவின் பலத்துக்கு ஏற்ப, அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டுப் பெற்று, களம் காண்போம்.

விவசாயிகளுக்கான மசோதாவை கண்டித்து, எதிர்க் கட்சிகள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தின. மசோதா தாக்கலுக்குப் பிறகு நடைபெற்ற பீஹார் சட்டமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x