Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் லாபம் ரூ. 241 கோடி

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (டிஎம்பி) நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ. 241.54 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. வங்கியின் அரையாண்டு நிதி நிலை அறிக்கையில் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தி வெளியிட்டார்.

வங்கியின் வைப்புத் தொகை ரூ. 37,161 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 34,068 கோடியாக இருந்தது. சேமிப்பு கணக்கு தொகை 16 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. 10,121 கோடியாக உள்ளது. வங்கி அளித்த கடன் தொகை 11 சதவீதம் அதிகரித்து ரூ. 29,603 கோடியாக உள்ளது. இதில் முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ. 20,477 கோடியாகும். விவசாயத்துறைக்கு வழங்கப்பட்ட கடன் அளவு ரூ. 7,490 கோடியாகும். சிறு, குறுந்தொழில்துறைக்கு வழங்கப்பட்ட கடன் அளவு ரூ. 11,674 கோடியாகும்.

வங்கிக்கு 50 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 66,765 கோடியாகும். வைப்புத் தொகை ரூ. 37,161 கோடி. சேமிப்புக் கணக்குத் தொகை 16 சதவீத வளர்ச்சியடைந்து ரூ. 10,121 கோடியை எட்டியுள்ளது.

வட்டி அல்லாத பிற இனங்களில் திரட்டப்பட்ட வருமானம் ரூ. 294 கோடியாகும். வட்டி மூலமான வருமானம் ரூ. 733 கோடியாகும். வங்கியின் நிகர மதிப்பு ரூ. 4,223 கோடியாக உயர்ந்துள்ளது. புதிதாக 6 ஏடிஎம்கள் திறக்கப்பட்டதில் மொத்த ஏடிஎம்களின் எண்ணிக்கை 1,162 ஆக உயர்ந்துள்ளது. 12 மண்டல அலுவலகங்கள், 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகளுடன் செயல்படுகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிதாக 54 கேஷ் ரீசைக்ளர் மெஷின் திறக்கப்பட உள்ளது. இதேபோல 14 இ-லாபி மையங்கள் திறக்கவும் வங்கி திட்டமிட்டுள்ளது. ரூபே கார்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x