ஏழைப்பெண்களுக்குக் கைகொடுக்கும் அரசுத் திட்டங்கள் :

ஏழைப்பெண்களுக்குக் கைகொடுக்கும் அரசுத் திட்டங்கள் :
Updated on
1 min read

இந்த கரோனா காலம் யாருமே எதிர்பாராத பேரிழப்புகளைப் பொருளாதார ரீதியாகவும், உயிர், உடைமைகள் ரீதியாகவும் ஏற்படுத்தி யுள்ளது. அதேநேரம், கரோனா கட்டுப்பாடுகளால் திருமண மண்டபம் பார்ப்பது, உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என ஊரையே அழைத்துத் தடபுடல் விருந்து வைப்பது, சீர்வரிசை வழங்குவது என அனைத்திலும் பெண் வீட்டாருக்கான திருமணச் செலவு வெகுவாகக் குறைந்துள்ளது. வழக்கத்தைவிடத் தற்போது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும் ஏழை, எளியோர் தங்கள் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க வழிதெரியாமல் தவித்து வருகின்றனர். அவர்களைப் போன்றவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் தமிழகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமண உதவிக்காக ஐந்து வகையான திருமண உதவித் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இவ்வளவு திட்டங்கள் இருந்தும் மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை. போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான அ.முகமது ஜியாவுதீன் கூறுகையில், ‘‘பொதுவாக அரசு வழங்கும் இதுபோன்ற அருமையான திட்டங்களுக்கான சட்ட விழிப்புணர்வு ஏழை, எளிய மக்களிடம் இருப்பது இல்லை. எத்தனையோ ஏழைப்பெண்களின் பெற்றோர் திருமணம் செய்து கொடுக்க வழியின்றி நிதியுதவிக்காக ஏங்கித் தவித்துவருகின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் மிகவும் பயனளிக்கும். இந்தத் திட்டங்களுக்குக் குறித்த காலத்திலும், தகுந்த ஆவணங்களுடனும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். அந்த விஷயத்தில் படித்தவர்களும்கூடக் கோட்டை விட்டுவிடுகின்றனர். விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை ஆன்லைன் வாயிலாகவே அறிந்துகொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலமாக இது தொடர்பான சட்ட விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in