Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM

தேவர் குரு பூஜை நாளை ஒழுக்க நாளாக தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்

தேவர் குரு பூஜை நாளை ஒழுக்க நாளாக தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவர் நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேவர் குரு பூஜை தினத்தை தமிழக அரசு ‘ஒழுக்க’ நாளாக அறிவித்து, கல்லூரிகள், இளைஞர்கள், மாணவர்கள், அரசு அலுவலகங்களில் தேவரின் கொள்கைகளை உறுதிமொழியாக ஏற்கச் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். அதுதான் தேவருக்குச் செய்யும் மரியாதையாகும்.

அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. தொழிலதிபர்கள் அல்லாமல் சேவை செய்யும் பக்தர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x