Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

ராமநாதபுரத்தில் 13 பேருக்கு கரோனா :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையில் சில மாதங் களாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 6 ஆயிரத்து 575 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் இவர்களில் 6 ஆயிரத்து 387 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 50 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் இதுவரை 138 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் கரோனா பரவுவதால் பொதுமக்கள் முகக் கவசம் அணியவும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x