காரில் வாள் வைத்திருந்த2 பேர் கைது :

காரில் வாள் வைத்திருந்த2 பேர் கைது :

Published on

சிவகங்கை அருகே வைரவன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வமணி(46). அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர். நேற்று முன்தினம் காரில் சொந்த ஊருக்குச் சென்றார்.

சிவகங்கை மதுரை சாலை சோதனைச் சாவடியில் அவரது காரை போலீஸார் சோதனையிட்டனர்.

அப்போது காரில் இருந்த வாளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சொந்த பாதுகாப்புக்காக வைத்தி ருந்ததாக செல்வமணி கூறியுள்ளார். இதையடுத்து, செல்வமணியையும், அவரது கார் ஓட்டுநர் கீழக்குளத்தைச் சேர்ந்த வேல்மணியையும்(29) போலீ ஸார் கைது செய்தனர். சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in