இலங்கையிலிருந்து தப்பி வந்ததொண்டியைச் சேர்ந்த இருவர் கைது :

சிந்தாதுரை, காளிதாஸ்
சிந்தாதுரை, காளிதாஸ்
Updated on
1 min read

தொண்டி அருகே காரங்காடைச் சேர்ந்தவர் அந்தோணி என்ற காளிதாஸ், புதுப்பட்டினத்தைச் சேர்ந்த சிந்தாதுரை, நாரேந்தலைச் சேர்ந்த மணி, ராஜேஸ் ஆகியோர், 2018-ம் ஆண்டு தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்திச் சென்றபோது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. ஜாமீனில் இருந்த நான்கு பேரில் காரங்காடைச் சேர்ந்த காளிதாஸ் மற்றும் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த சிந்தாதுரை ஆகிய இருவரும் இலங்கையிலிருந்து படகில் தப்பி திருப்பாலைக்குடி கடற்கரை பகுதிக்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு மற்றும் தேவிபட்டினம் மெரைன் போலீஸார் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in