கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு :

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர் களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர் களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி 3,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற் கான 14,404 அலுவலர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரிய உள்ளனர் என்பதற்கான முதற்கட்ட பணி ஒதுக்கீடு மாவட்டஆட்சியர் அலுவலக கணினி அறையில் கணினி மூலம் நேற்று முன்தினம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயிற்சிவழங்கப்பட்டு, அவர்கள் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படு வார்கள் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in