சிதம்பரத்தில் மருத்துவ மாணவர்கள் 16-வது நாளாக தொடர் போராட்டம் :

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் புல முதல்வர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் புல முதல்வர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மற்ற அரசுமருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி 58 நாட்களாக தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக கடந்த பிப்ரவரி 4-ம் தேதி தமிழக அரசு, மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் இந்த ஆண்டிலிருந்து வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது. தற்போது மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தும் போது அரசு கட்டணத்தை வசூலிக்காமல் மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே வசூலிக்கும் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அரசு ஆணையின்படி கல்வி கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி நேற்று 16- வது நாளாக மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in