இலந்தங்குடிப்பட்டியில் கண்காணிப்பு குழுவாகன சோதனையில் ரூ.17.19 லட்சம் பறிமுதல் :

சிவகங்கை அருகே இலந்தங்குடிப்பட்டியில் வாகனச் சோதனையில் ரூ.17.19 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்.
சிவகங்கை அருகே இலந்தங்குடிப்பட்டியில் வாகனச் சோதனையில் ரூ.17.19 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்.
Updated on
1 min read

சிவகங்கை அருகே வாகனச் சோதனையில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.17.19 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை அருகே இலந்தங்குடிப்பட்டியில், சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகங்கையில் இருந்து கோட்டையூருக்கு சென்ற சோலை என்பவரது மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்தனர்.

இதில் அவர் ஆவணமின்றி ரூ. 17.19 லட்சம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சிவகங்கை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in