ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் :

திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்றுநர் ஜோஸ்பின் செல்வராஜ் பேசினார்.
திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்றுநர் ஜோஸ்பின் செல்வராஜ் பேசினார்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் தொழில் முனைவோர் குழு சார்பில் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பேராசிரியர் விஜய்ஆனந்த் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயா வரவேற்றார். ட்ரூபா தொண்டு நிறுவன இயக்குநர் மைக்கேல் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த கருத்துகளை எடுத்துரைத்தார். பயிற்றுநர் ஜோஸ்பின் செல்வராஜ் தேனீ வளர்ப்பு முறை குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார். பேராசிரியர்கள் ராஜ்குமார், நாகராஜன், சஞ்சீவி, முத்துக்குமார் மற்றும் மாணவர்கள், சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர். பேராசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in