Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

சிறுவர்கள் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல்

போடிநாயக்கனூர் உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் பல சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின் றனர். பயம் அறியாமல் அதிவேகமாக ஓட்டுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இவற்றைத் தடுக்கும் விதமாக 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீறி ஓட்டிவந்தால் வாகனம் பறிமுதல் செய்வதோடு, உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x