Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு மருத்துவ முகாம்

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப் புணர்வு விழாவினை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

சத்யசுபா மருத்துவமனையுடன் இணைந்து நடந்த உடல் பரிசோதனை முகாமினை அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் கணேசன் தொடங்கி வைத்தார். முகாமில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பணிமனை தொழிலாளர்கள் பங்கேற்றனர். மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சி யில் துணை மேலாளர்கள் முகமது ராவுத்தர், ஜெகதீசன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x