போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர்.
திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர்.
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். 62 மாத கால அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in