Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

திண்டுக்கல்லில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு தலைமையில் எரிவாயு நுகர்வோர் மாதாந்திர கூட்டம் நாளை (பிப்ரவரி 8) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும் 2020 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவைடைந்த காலாண்டு கூட்டம் மற்றும் ஜனவரி மாதத்திற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் எரிவாயு நிறுவனங் களின் விற்பனை மேலாளர்கள் மற்றும் மாவட் டத்திலுள்ள எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்கள் மற்றும் கோரிக் கைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x