Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

சாலை விரிவாக்கத்தின் பெயரில் வெட்டப்படும் மரங்கள் திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பத்தூர் அருகே சாலை விரி வாக்கத்துக்கு சம்பந்தமில்லாத இடங் களிலும் பழமையான மரங்கள் வெட்டப் படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல்-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை மூன்று கட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் முதல் நத்தம் வரை 38 கி.மீ.க்கு ரூ.240.38 கோடியிலும், நத்தம் முதல் முதல் கொட்டாம்பட்டி வரை 13 கி.மீ.க்கு ரூ.69.73 கோடியிலும், கொட்டாம்பட்டி முதல் திருப்பத்தூர் வரை 30 கி.மீ.க்கு ரூ.113.96 கோடியிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மேலூர் முதல் காரைக்குடி வரை திருப்பத்தூர் வழியாக நான்கு வழிச் சாலை பணி நடக்கிறது. இச்சாலையும், திண்டுக்கல்-காரைக்குடி சாலையும் பிள்ளையார்பட்டி அருகே இணைகிறது.

தற்போது காரைக்குடி-திண்டுக்கல் சாலையில் கொட்டாம்பட்டி முதல் திருப்பத்தூர் வரை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இந்தச் சாலையின் இருபுறமும் தலா 1.5 மீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்பணிகளுக்காக சாலையோர மரங்களை வெட்டும் பணியில் ஒப்பந்த தாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் விரிவாக்கப் பகுதியில் மட்டுமின்றி அதைத் தாண்டியும் உள்ள பழமையான மரங்களை வெட்டி அகற்றுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், இச்சாலையில் ஏராளமான பழமையான மரங்கள் உள்ளன. இந்நிலையில், சாலை விரிவாக்கத்துக்குத் தேவையான இடங்களில் மட்டுமின்றி சம்பந்தமில்லாத இடங்களிலும் மரங்களை வெட்டுவது வேதனை அளிக்கிறது.

இதைத்தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x