Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM

காமராசர் பல்கலைக்கழகத்தில் - தேவர் ஜெயந்தி இணையவழி சொற்பொழிவு :

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இயங்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இருக்கை சார்பில், முத்துராமலிங்கத் தேவ ரின் 144-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்புச் சொற்பொழிவு இணையவழியில் நடந்தது.

துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் ஆபிரகாம் மேஷாக் பொன்ராஜ் தலைமை வகித்தார். தமிழியற் புலத் தலைவர் ராமராஜபாண்டியன் வரவேற்றார். தியாகராசர் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை பேராசிரியர்கு.ஞானசம்பந்தன் பேசினார்.

பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பதிவாளர் வசந்தா செய்திருந்தார். தமிழியல் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x