மதுரையில் தகவல் ஆணைய கிளை அமைக்கப்படுமா? : தகவல் ஆணைய தலைவர் பதில் அளிக்க உத்தரவு

மதுரையில் தகவல் ஆணைய கிளை அமைக்கப்படுமா? :  தகவல் ஆணைய தலைவர் பதில் அளிக்க உத்தரவு
Updated on
1 min read

மதுரையில் மாநில தகவல் ஆணையத்தின் கிளை அமைக்கக் கோரிய வழக்கில் மாநில தகவல் ஆணையர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த கோவிந்த், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை 2010-ல் அமல்படுத்தியது. ஆனால், பல்வேறு அரசு அலுவலகங்களில் முறையாக தகவல்களை தருவதில்லை.

இது தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீடு மனுக்கள் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் வழக்காக பதிவு செய்து விசாரிக்கப்படும்.

இதற்காக தென் மாவட்ட மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாநில தகவல் ஆணையத்தின் கிளையை மதுரையில் அமைக்கக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மதுரையில் மாநில தகவல் ஆணையத்தின் கிளை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. தகவல் ஆணையத்தின் தலைவர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 20-க்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in