பெண்  தற்கொலை :

பெண் தற்கொலை :

Published on

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்முருகன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வம்(33). செந்தில்முருகன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செந்தில்முருகன் நேற்று மீண்டும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த செல்வம், அங்குள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in