Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM

மணப்பாறை அருகேதுப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை :

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள தாதகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர். இவரது 2-வது மனைவி அம்சவள்ளியின் இளைய மகன் பாலசுப்பிரமணி (21). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் வீட்டின் அருகிலுள்ள புளியந்தோப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்து கிடந்தார். தகவலறிந்த மணப்பாறை போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, பாலசுப்பிரமணி கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலம் கிடந்த பகுதியில் உடைந்த நிலையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பாலசுப்பிரமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார். இதை இவரது தந்தை அழகர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்ட நிலையில், அழகர் கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். சற்று நேரம் கழித்து அந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற பாலசுப்பிரமணி அருகிலுள்ள புளியந்தோப்பில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x