Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM

ராம்ராஜ் காட்டன் லோகோவை போலியாக பயன்படுத்திய மூவர் கைது :

தென்காசி மாவட்டத்தில் ராம்ராஜ் காட்டன் லோகோவை போலியாக பயன்படுத்திய கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

ராம்ராஜ் நிறுவனத்தின் ட்ரேட் மார்க் பதிவு செய்யப்பட்ட முத்திரையையும் மற்றும் பெயரையும் பயன்படுத்தி சிலர் போலி தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தது இந்நிறுவனத்துக்கு தெரியவந்தது. இது குறித்து ஆலங்குளம் போலீஸில் ராம்ராஜ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் எஸ். சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில், ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை பகுதியிலுள்ள ஜவுளி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் போலி தயாரிப்புகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்நிறுவனத்தின் உரிமையாளர் என். ராஜேந்திரன் அவரது மகன்கள் ஜெயப்பிரகாஷ், தமிழரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மோசடி வேலைகளில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் திலகராஜ், செல்வகுமார் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x