Published : 14 Jan 2021 03:23 AM
Last Updated : 14 Jan 2021 03:23 AM

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினர் புகார்

இந்திய தொழிற்சங்க மைய செயலாளர் தாமோதரன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் அளிக்கப்பட்ட மனு விவரம் : தொழிலாளர் நல அலுவலகத்தில் அரசு உத்தரவுக்கு மாறாக, டோக்கன் வழங்காமல் பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. உண்மை பயனாளிகள் பலர் பொங்கல் பரிசு கிடைக்காமல், வெறும் கையுடன் வீடு திரும்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பயனாளிகளுக்கு முறையாக டோக்கன் கொடுத்து, அதன் பிறகு பரிசு பொருட்களை விநியோகித்து இருந்தால், யாரும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

இதுகுறித்து முறையிடச் சென்ற சிஐடியு மாநில குழு உறுப்பினர் பெருமாளை அவதூறாக பேசியுள்ளனர். தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு இன்றி, பயனாளிகள் பட்டியலை வெளியிடாமல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x