

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-ம்ஆண்டில் 128 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில்2020-ம் ஆண்டு பாலியல் குற்றவாளிகள் 19 பேர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 10 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேர் உள்ளிட்ட 128 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு 77 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 2020-ல் கூடுதலாக 51 பேர் இச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை வழக்குகள்
போதைப்பொருள்
இதுபோல் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை தொடர்பாக 841 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.58,54,396 மதிப்புள்ள 9,587 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 327 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணல் திருட்டு
சாலை விபத்துகள்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 213 சாலை விபத்துகள் குறைவாக நடைபெற்றுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கையும் 51 குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் 95 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.