Published : 15 Dec 2021 03:10 AM
Last Updated : 15 Dec 2021 03:10 AM

காவல்கிணறு தொழிலாளி மரணம் : உறவினர்கள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ஊரல்வாய்மொழி சூச்சிகுளத்தைச் சேர்ந்தவர் மணி என்ற மாசிலாமணி(50) கட்டிட பணியாளராக இருந்தார். இவர் தனது மகனுக்கு புதிதாக ஒரு மோட்டார் சைக்கிளை வள்ளியூரில் வாங்கிவிட்டு, அதில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். காவல்கிணறு மங்கம்மாள் சாலை விலக்கு அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த மாசிலாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பணகுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் மாசிலாமணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பணகுடி போலீஸ் நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குவாரிகளில் இருந்து அதிகளவில் கனிம வளங்களை எடுத்துச் செல்வது குறித்து அதிகாரிகளுக்கு பல புகார்களை மாசிலாமணி அனுப்பியுள்ளதுடன் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் திடீரென்று விபத்தில் அவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விபத்தில் அவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x